100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க இ.கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்
100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
HIGHLIGHTS
தருமபுரி வட்டாரம், மூக்கனூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்.எம்.மாதேஸ்வரன் இன்றைய அரசியல் நிலை மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து பேசினார்.
மாநாட்டில் மூக்கனூர் அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மூக்கனூர் அரசு சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மயான வசதி ஏற்படுத்த வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை தரவேண்டும்.
வீடில்லாதவர்களுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். தபால் நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கல்யாண மண்டபம் அமைக்க வேண்டும். நூலகத்தை புதுபிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியப் பொருளாளர் பழனி,முனுசாமிஆகியோர் பேசினர்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி கிளை செயலாளராக முனுசாமி, துணைச் செயலாளராக முருகன், பொருளாளராக காளியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.