/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர். 

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850ஐ அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.வி.ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு, ஈமகாரியத்திற்கு ரூபாய் 50 ஆயிரம், இலவச பேருந்து அட்டை, ஓய்வுக்கால பணிக்கால பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் ராமலிங்கம், சசிரேகா, தேவி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பாபு, அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பன்னீர் செல்வம், வட்டத் தலைவர் ஒ.செல்வமணி உள்ளிட்ட பலர் பேசினர்.

Updated On: 13 Sep 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’