செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம்
செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் கொரொனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல வழிகளில் பொதுமக்களை நகராட்சி நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி முகாம் நாளை காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் மூன்றாவது அலையோ, அல்லது வேறு இக்கட்டான சூழல் வராமல் பாதுகாக்க முடியும் அதன்படி செங்கல்பட்டு நகராட்சியில் 17 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நாளை 12. 9. 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இந்த ஒரு நாள் முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், எஸ்.ஆர்.கே திரையரங்கம், வடமலைப்பள்ளி, குண்டூர், லதா திரையரங்கம், வேதாச்சலம் நகர் ஆகிய பகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
பிற்பகல் 1 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்
செங்கல்பட்டு ரயில் நிலையம், முருகேசனார் ஐ.சி.டி.எஸ், பச்சையம்மன் கோயில் தெரு, அலிசன் பள்ளி, செங்கை ராயல்சிட்டி, அங்கமுத்து திரையரங்கம், பிருந்தாவனம் பாள்ளி, புதிய பேருந்து நிலையம், அனுமந்தபுத்தேரி ஆரம்ப சுகாதார நிலையம், இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 7 மணிவரை முகாம்கள் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தவராது கலந்துகொண்டு தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வரும்போது, தவராமல் ஆதார் கார்டை எடுத்துவறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.