Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு அரசுமருத்துவமனையை ஆக்கிரமித்துள்ள கொரோனா மருத்துவ கழிவு
கொரோனா மருத்துவக்கழிவுகளால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிரம்பியுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினந்தோறும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவுப்பொருட்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொட்டியதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து கொட்டப்பட்டுள்ள கழிவு பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது