மின்சார இரயில் சேவை குறைப்பு அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே அனுமதி
மின்சார இரயில் சேவை குறைப்பு
HIGHLIGHTS
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னக இரயிவேத்துறை சார்பில் நாளை முதல் பயணிகள் இரயில்களை குறைத்துள்ளது.
தென்னக இரயில்வே அறிவித்துள்ள முழு விவரங்கள் இதுதான்
செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை 29 மின்சார இரயில்களும், காஞ்சிபுரம், திருமால்பூரிலிருந்து, 11 இரயில்கள் என மொத்தம் 40 இரயில்கள் சென்று வந்தன. நாளை முதல் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வழித்தட மார்கமாக காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூருக்கு தலா ஒரு மின்சார இரயிலும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு 18 இரயில்கள் மட்டுமே இயக்கப்படும். அத்தியாவசிய தேவையான மருத்துவர்கள், செவிலியர்காள் அரசு ஊழியர்கள், மாநகராட்சி, மற்றும் நகராட்சி ஊழியர்கள், மெடிக்கல் ஊழியர்கள் உள்பட அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயணம் செய்யமுடியும்.
இரயிலில் பயணிக்க வருவோர் கட்டாயமாக அடையாள அட்டை மற்றும் தகுந்த ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது