/* */

கூடுவாஞ்சேரி அருகே 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா பாதிப்பு

கூடுவாஞ்சேரி அருகே 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா 25 போ் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளநிலையில் 8 போ் தப்பியோட்டம்.

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரி அருகே 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா பாதிப்பு
X

கூடுவாஞ்சேரி அருகே அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுமானப்பணியிலிருந்த 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுமானப்பணியிலிருந்த 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.அவா்களில் 25 போ் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளநிலையில் 8 போ் தப்பியோடி விட்டனர். அவா்களை சுகாதாரத்துறையினா் தேடுகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 2,100 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் சுமாா் 100 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு கட்டிட வேலை செய்த தொழிலாளா்களில் சிலருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதையடுத்து கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதாரத்துறையினா்,அவா்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தினா். அதில் 33 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து இன்று காலை சுகாதாரத்துறையினா் 108 ஆம்புலன்ஸ்களுடன் அப்பகுதிக்கு வந்தனா்.கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளவா்களை தேடிக்கண்டுப்பிடித்து ஆம்புலன்ஸ்கள் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். இவ்வாறாக 25 பேரை மருத்துவமனையில் சோ்த்துவிட்டனா்.

ஆனால் அவா்களில் 8 போ் மாயமாகி விட்டனா். அந்த 8 பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. அவா்களை சுகாதாரத்துறையினா் வந்து மருத்துவமனைக்கு போக அழைத்தபோது,புறப்பட்டு வருவது போல் நடித்து தலைமறைவாகிவிட்டனா்.அவா்களை சுகாதாரத்துறையினா் தேடிவருகின்றனா்.

கொரோனா பாதிப்பிற்குள்ளான வடமாநில தொழிலாளா்கள் 8 போ் மருத்துவமனைக்கு செல்லாமல் தப்பியோடியது இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 May 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...