/* */

நாளை பட்டா சிறு கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள்

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்கள் பட்டா, சிறுகணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்களின் விவரங்களை கலெக்டர் அறிவித்தார்.

HIGHLIGHTS

நாளை  பட்டா சிறு கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் 24.11.2021 (புதன் கிழமை) அன்று நடக்கவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

வட்டம் வாரியாக 24.11.2021 அன்று (புதன் கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்:

அரியலூர் வட்டத்தில அமீனாபாத் மற்றும் அரியலூர் (வ) ஆகிய கிராமங்களுக்கு அரியலூர் (வ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், சின்னப்பட்டாக்காடு மற்றும் கோவிலூர் கிராமங்களுக்கு கோவிலூர் கிராம சேவை மைய கட்டிடத்திலும்,

செந்துறை வட்டத்தில் பொன்பரப்பி மற்றும் சிறுகளத்தூர் கிராமங்களுக்கு பொன்பரப்பி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்,

உடையார்பாளையம் வட்டத்தில் உடையவர்தீயனூர் மற்றும் கடம்பூர் ஆகிய கிராமங்களுக்கு உடையவர்தீயனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், எரவாங்குடி மற்றும் தண்டலை ஆகிய கிராமங்களுக்கு தண்டலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்,

ஆண்டிமடம் வட்டத்தில் விளந்தை (வ) மற்றும் விளந்தை (தெ) ஆகிய கிராமங்களுக்கு விளந்தை (தெ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கவுள்ளது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொது மக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Nov 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!