/* */

அரியலூரில் நாளை கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நாளை 10ம் தேதி 38 கிராமங்களில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் நாளை கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 2021-22ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தித் துறை மற்றும் கைத்தறி துறை, கைவினைப்பொருட்கள் துறை மற்றும் ஜவுளி கதர் துறை ஆகிய துறைகள் இணைந்து ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு உத்திரவின்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் 10.05.2022 அன்று 38 கிராமங்களில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் அரியலூர் வட்டாரத்தில் வாலாஜா நகரம், ரெட்டிப்பாளையம், கடுகூர், ஆலந்துறையார்கட்டளை, எருதுகாரன்பட்டி, காவனூர், நாகமங்கலம், புங்கங்குழி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் செந்துறை வட்டாரத்தில் மணப்பத்தூர், தளவாய், ஆலத்தியூர், அசவீரன்குடிகாடு, மணக்குடையான் ஆகிய கிராம பஞ்சாயத்துகளிலும் திருமானூர் வட்டாரத்தில் அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, சின்னப்பட்டாக்காடு, கண்டிராதீர்த்தம், பூண்டு ஆகிய கிராம பஞ்சாயத்துகளிலும் செயங்கொண்டம் வட்டாரத்தில் தழுதாலைமேடு, குந்தவெளி, முத்துசேர்வாமடம், கங்கை கொண்ட சோழபுரம், காட்டகரம், தத்தனூர், இறவாங்குடி ஆகிய கிராம பஞ்சாயத்துகளிலும் ஆண்டிமடம் வட்டாரத்தில் கூவத்தூர், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை, இலையூர், சிலம்பூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளிலும் தா.பழூர் வட்டாரத்தில் அம்பாப்பூர், சிந்தாமணி, தா.பழூர், வேம்புகுடி, பருக்கல், ஆகிய கிராம பஞ்சாயத்துகள் என மொத்தம் 38 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற உள்ளது.

இச்சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த பணிகள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 May 2022 9:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்