/* */

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த உண்டியல் உடைப்பு சம்பவங்கள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
X

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அரியலூர் மாவட்டம் திருமழபாடி உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. சுற்றுலாத்தலமாக உள்ள இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சிவனை வழிபட்டு செல்கின்றனர். இவர்கள் தங்களது காணிக்கைகளை கோவிலில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். கடந்த ஆறாம் தேதி இக்கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.

இதையடுத்து இன்று காலையும் கோவிலுக்கு வந்த அதிகாரிகள் கோவிலின் 4 உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட நிகழ்ச்சி கண்டு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருட்டு குறித்து கோயில் நிர்வாக அலுவலர் மணிவேல் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமானூர் போலீசார் கோவிலிலுள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த உண்டியல் உடைப்பு சம்பவங்கள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 Jun 2022 12:33 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்