10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறைப்பயிற்சி வகுப்பில் சேர அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் செய்முறைப்பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
HIGHLIGHTS
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் செய்முறைப்பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
2021-2022-ம் கல்வி ஆண்டிற்க்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012 க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப்பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனித்தேர்வர்களும் 03.12.2021 -க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு சென்று செய்முறைப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2021-2022-ம் கல்வி ஆண்டில் 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களை தொடர்புகொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 18.11.2021 முதல் 03.12.2021 வரை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 03.12.2021-க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.