பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றம்
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில், உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு, மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ பிரகத்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. காலை துவங்கிய இவ்விழா, சுவாமி அம்பாள் அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வந்த நிலையில் கொடிமரம் முன்பு கொடியேற்றப்பட்டு, கொடி மரத்திற்கும் சுவாமி, அம்பாளுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் அறநிலையத் துறை அதிகாரிகளும், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் குடும்பத்தினரும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசித்தனர். கர்ப்ப கிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. வரும் 17-ஆம் தேதி சுவாமி வீதிஉலா, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பக்தர்கள் உபயத்தில், தீர்த்தவாரி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.