கரைவெட்டி பறவைகள் சரணாலயம் : கணக்கெடுப்பு முகாம்
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது..
வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு முகாமில் பறவை ஆர்வலர்கள் தேசிய கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர்.கோகுலா , பசுமை எதிர்கால அறக்கட்டளை விஞ்ஞானி டாக்டர்.ஜஸ்டஸ் ஜோசுவா ஆகியோர் மூலமாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் குகனேஷ் வனச்சரக அலுவலர் பழனிவேல் வனவர் சக்திவேல் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் வனக் காப்பாளர் விக்னேஷ் மற்றும் வனப் பணியாளர்கள். கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு 50 வகையான வெளிநாட்டு பறவைகள் வருடம்தோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் வந்து செல்கின்றன.
அதுபோல இந்த வருடம் பறவைகளின் வருகை மற்றும் எண்ணிக்கையும் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது அதுமட்டுமல்லாமல் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் 20,000 முதல் 25,000 வரையான உள்நாட்டு பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் இருக்கின்றன.