/* */

பூ விற்கும் தொழிலாளி வீட்டில் இரண்டரை சவரன் நகை, ரூ. 23 ஆயிரம் திருட்டு

அரியலூரில், பூ விற்கும் தொழிலாளியின் வீட்டில் இரண்டரை சவரன் நகை மற்றும் 23 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது.

HIGHLIGHTS

பூ விற்கும் தொழிலாளி வீட்டில் இரண்டரை சவரன் நகை, ரூ. 23 ஆயிரம் திருட்டு
X

அரியலூர் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் கஜலட்சுமி. இவர், தேரடி பகுதியில், சாலை ஓரத்தில் பூக்களை கட்டி விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த கஜலட்சுமி, வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது, நகை - பணம் வைத்திருந்த பெட்டி திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பெட்டியில் வைத்திருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் 23ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த கஜலட்சுமியின் புகாரின் பேரில் அரியலூர் காவல் போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது கோயிலுக்குச் சென்ற நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 9 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...