பூ விற்கும் தொழிலாளி வீட்டில் இரண்டரை சவரன் நகை, ரூ. 23 ஆயிரம் திருட்டு
அரியலூரில், பூ விற்கும் தொழிலாளியின் வீட்டில் இரண்டரை சவரன் நகை மற்றும் 23 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது.
HIGHLIGHTS
அரியலூர் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் கஜலட்சுமி. இவர், தேரடி பகுதியில், சாலை ஓரத்தில் பூக்களை கட்டி விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த கஜலட்சுமி, வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது, நகை - பணம் வைத்திருந்த பெட்டி திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெட்டியில் வைத்திருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் 23ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த கஜலட்சுமியின் புகாரின் பேரில் அரியலூர் காவல் போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது கோயிலுக்குச் சென்ற நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.