தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி-4 பணிக்காலியிடங்களுக்கான போட்டித்தேர்விற்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது 16.07.2022 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாதிரித்;தேர்வு நடைபெறவுள்ளது.
இம்மாதிரித்தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுடைய போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் அரியலூர் மாவட்டத்தினைச்சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்; https://forms.gle/uvhat79jojgtXMkd6 என்ற Google Form-னை சொடுக்கி தங்களது விவரங்களை 15.07.2022 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி Google Form-இல் உள்ளீடு செய்து விவரங்களை பதிவு செய்த இளைஞர்கள் மட்டும் இலவச மாதிரித்தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது TNPSC GROUP-IV விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நேரில் வருகைபுரிந்து பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.