/* */

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க அலுவலர்கள் எண் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க அலுவலர்கள் எண்ணை கலெக்டர் அறிவித்தார்.

HIGHLIGHTS

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க அலுவலர்கள் எண் அறிவிப்பு
X

கொரோனா - 19 வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவுவதால் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாடு மாநிலத்தை விட்டு அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வித பிரச்சினைகள் இன்றி தங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் புகார் குறைகளை தீர்ப்பதற்காக, மாவட்ட அளவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தொலைபேசி எண் மற்றும் உறுப்பினர்களின் தொலைபேசி எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி மையம் அமைத்திட சென்னை தொழிலாளர் ஆணையர் அவர்கள் உத்தவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திரு.பாலசுப்ரமணியன் அவர்களும் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் திரு.தர்மசீலன் அவர்களும் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

மேலும் இம்மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) கு.விமலா தொலைபேசி எண்.9942832724 மற்றும் குழு உறுப்பினர்கள் தொழிலாளர் உதவி ஆய்வாளர் இரா.குருநாதன் தொலைபேசி எண்.9629494492, முத்திரை ஆய்வாளர் ராஜா தொலைபேசி எண்.7904250037 ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம். மேலும் பெறப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Updated On: 7 May 2021 4:20 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி