/* */

வாக்கு எண்ணிக்கை அரசு அலுவலர்கள் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கை அரசு அலுவலர்கள் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டிகள் கீழப்பழூவூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையின் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே மாதம் 2ம்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் அனைவரும் கட்டாயம கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்றுஇல்லை என்பதை உறுதிசெய்தவர்களை மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்க தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

இதனையடுத்து அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் அரசு அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சி முகவர்களுக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாமில் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசியல் கட்சி முகவர்களுக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Updated On: 29 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  3. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  9. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  10. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு