அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
![அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2022/03/31/1507156-cong-arppattam-2.webp)
அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் அறிவிப்பின்படி மத்தியஅரசு பொதுமக்களுக்கு இன்னல் தருகின்ற வகையில் சமையல் கியாஸ், பெட்ரோல் விலை, டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டித்து வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அமானுல்லா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜே.பி.ராஜா, நகர செயலாளர் ஜி.ரவிச்சந்திரன், ஏழாவது வார்டு தலைவர் கே.சங்கர், நகர துணைத்தலைவர் செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் முத்து, அப்துல்ரகுமான், நூர்முகமது ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. கேஸ்சி லிண்டருக்கு மாலைஅணிவித்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.