Begin typing your search above and press return to search.
பெட்ரோல், கேஸ் விலை உயர்வு: செந்துறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
செந்துறை வட்டார காங்கிரஸ் சார்பாக கேஸ் சிலிண்டர், மற்றும் இரு சக்கர வாகனத்திக்கு மாலை அணிவித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டார காங்கிரஸ் சார்பாக வட்டார தலைவர் (தெ) சி. இராஜேந்திரன், தலைமையில் கேஸ் சிலிண்டர், மற்றும் இரு சக்கர வாகனத்திக்கு மாலை அணிவித்து,ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில், வடக்கு வட்டார தலைவர் மணிகண்டன், குழுமுர் எஸ்சி எஸ்டி பிரிவு வட்டார தலைவர் ம. காமராஜ், அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் பாக்கியராஜ், எஸ்சி எஸ்டி தலைவர் உஞ்சினி தியாகராஜன், வட்டார துணை தலைவர் முருகன், தொப்பி சிவசுப்ரமணியன், அய்யாக்கண்ணு, மாரிமுத்து, மணி, உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.