/* */

திருமானூர்: கொலையாளிகளை கைது செய்யக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி திருமானூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருமானூர்: கொலையாளிகளை கைது செய்யக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
X

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை உடன் கைது செய்யக்கோரியும், அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையத்தில், திருமானூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம் (கம்யூனிஸ்ட் கட்சி), புனிதன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர்கள் மருதமுத்து(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), செளரிராஜன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை காவல்துறை உடன் கைது செய்து அதிக பட்ச தண்டனை வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சங்கர், முருகேசன், கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சாமிதுரை, ஆரோக்கியநாதன், தமிழ்நாடு விவசாய சங்கம் வரப்பிரசாதம், தங்கராசு உள்ளிட்ட, இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  3. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  8. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  9. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  10. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!