Begin typing your search above and press return to search.
அரியலூரில் ஜாதி குறித்த சர்ச்சை கேள்வி தொடர்பாக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
ஜாதி குறித்த சர்ச்சை கேள்வி தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி அரியலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
ஜாதி குறித்த சர்ச்சை கேள்வி தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி அரியலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் எது தாழ்ந்த ஜாதி குறித்த சர்ச்சையான கேள்வி இடம் பெற்றது. ஜாதி வெறியை தூண்டும் வகையில் கேள்வித்தாளை தயாரித்தவரின் மீதும் பல்கலைக்கழகத்தின் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும்.
மேலும் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.