அரியலூர் மாவட்டத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 12 பேர். மருத்துமனைகளில் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 16,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,167 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 252 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 930 பேர். இதுவரை 2,99,881 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,556 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,83,325 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,176. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,92,989. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,576 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,824 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 36,640 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 112 பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2023 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1582 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 441 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.