/* */

அரியலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்

அரியலூர் நகரில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தைக்கு கருப்பு பூஞ்சைக்கான மருந்தை வழங்ககோரி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்
X

அரியலூரில் கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மருந்தினை வழங்குமாறு தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.அரியலூர் நகரில் வசிக்கும் எல்ஜசி ஏஜென்ட் செல்வராஜ் எனபவர் கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பரிசோதனையில் செல்வராஜ்க்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அரியலூரில் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதியில்லாததால் செல்வராஜ் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அம்மருத்துவமனையில் செல்வராஜ்க்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், கருப்பு பூஞ்சைக்கான ஆம்போடெரிசின் பி மருந்தினை தொடர்ந்து செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இம்மருந்துகள் வெளிமருந்து கடைகள் எங்கும் கிடைக்காததால் செல்வராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இம்மருந்து அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதையடுத்து தங்களுக்கு இம்மருந்தை பெற்றுத்தருமாறு அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் செல்வராஜ் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

மேலும் தமிழக முதல்வர் உடனடியாக கருப்பு பூஞ்சை நோயிற்கான ஆம்போடெரிசின் பி மருந்தினை வழங்கி தனது தந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என ஊடகத்தின் வாயிலாக செல்வராஜ் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

Updated On: 28 May 2021 4:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  3. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  4. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  5. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  8. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  9. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  10. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!