/* */

காற்றில் இருந்து தண்ணீர்..! வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிசயம்..!

வண்டலூரில் அமைக்கப்பட்டுள்ள காற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் தயாரிக்கும் இயந்திரம் எப்படி இயங்குகிறது தெரியுமா?

HIGHLIGHTS

காற்றில் இருந்து தண்ணீர்..! வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிசயம்..!
X

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 2021 டிசம்பர் 18ம் தேதி ஒரு புதிய குடிநீர் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது. அந்த இயந்திரத்தில் குழாய் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. பின் எப்படி தண்ணீர் கிடைக்கிறது? நிசான் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் அந்த குடிநீர் இயந்திரத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

எவ்வாறு அது செயல்படுகிறது?

வளிமண்டலத்தில் உள்ள காற்றை அப்படியே தண்ணீராக மாற்றித் தரும் அக்ஷய பாத்திரம்தான் இந்த இயந்திரம். கொஞ்சம் வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மையும். நவீன தொழில்நுட்பத்தில் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காற்றில் சுமார் 3095 கியூபிக் மைல்ஸ் தண்ணீர் இருப்பது அறிவியல் ஆய்வுப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. அதில் 1 கியூபிக் மைல் என்பது 4164 பில்லியன் லிட்டர்கள்.1 பில்லியன் லிட்டர் என்பது 100 கோடி லிட்டருக்கு சமம். தெளிவாக சொன்னால், இந்த பூமியில் உள்ள ஆறுகளில் ஓடும் தண்ணீரை விட 6 மடங்கு அதிகமான தண்ணீர் வளிமண்டலத்தில் இருக்கிறது. இந்தத் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு 40 தடவை மழை,வெள்ளம்,புயல் போன்ற இயற்கை காரணிகளால் மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது.

வளிமண்டல காற்று :

வளிமண்டலத்தில் இருக்கும் காற்று இந்த இயந்திரத்தில் உள்ள மோட்டார் மூலமாக உள்ளே உறிஞ்சப்படுகிறது. அந்தக் காற்று ஒரு ஃபில்டர் வழியே செலுத்தப்படுகிறது. அந்த ஃபில்டர் காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி தூய்மை ஆக்குகிறது. அவ்வாறு சுத்தமாக்கப்பட்ட காற்று ஒரு குளிர்விப்பான் அதாவது Condensation unit வழியாக செலுத்தப்படுகிறது. அங்கு காற்றானது குளிர்ந்து அப்படியே நீராக மாறுகிறது. அந்த நீரை மீண்டும் சுத்திகரித்து,மினரல்கள் சேர்க்கப்படுகிறது. அதுவே பின்னர் குடிப்பதற்கு வழங்கப்படுகிறது.

ஏசி கூட கிட்டத்தட்ட இதே முறையில் தான் இயங்குகிறது. ஏசியில் இருந்து தண்ணீர் வெளியறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஏசியில் வரும் தண்ணீர் ஒரு குழாய் மூலமாக வெளியேற்றப்படுகிறது.

இந்த இயந்திரம் மூலம் பெறப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மினரல்கள் சேர்க்கப்பட்டு பின்னர் குடிநீராக வழங்கப்படுகிறது. இதுதான் அந்த இயந்திரத்தின் இயக்க முறை. இப்படி மிக சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் சுவையான தண்ணீரை உருவாக்கித் தரும் இந்த இயந்திரத்தை ஜப்பான் நாட்டின் நிசான் NISSAN கார் நிறுவனம் தங்களது CSR (Socially Responsible Companies)ஆக்ட்டிவிட்டியின் மூலமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் நிறுவித் தந்துள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஒரு நாளில் கிட்டத்தட்ட ஆயிரம் லிட்டர்கள் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.

Updated On: 3 Jun 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!