Begin typing your search above and press return to search.
தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசி வேண்டும்
-விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பிரதமருக்கு கடிதம்.
HIGHLIGHTS
விருதுநகர் எம்.பியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான (தெலுங்கானா) ப.மாணிக்கம் தாகூர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார், கடிதத்தில் எழுதியுள்ளததாக அவர் கூறியதாவது,
தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளதாக செய்திகள் வருகின்றது. அதற்காக பிரதமர் அவர்களுக்குகடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழ் நாட்டிற்கு தேவையான தடுப்பூசி கொடுப்பதற்கு உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவரதன் அவர்களிடம் எப்போது கேட்டாலும் அவருடைய இயலாமை தான் கூறுகிறாரே தவிர அதற்கான வழியை காட்டவில்லை அதனால் தான் நேரடியாக பிரதமரிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளேன் என்றார்.