திருவண்ணாமலையில் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி
68வது மாநில அளவிலான பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவண்ணாமலையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
தமிழ்நாடு கபடி கழகம் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும் 68வது மாநில அளவிலான பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவண்ணாமலையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் போட்டிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற அதிக அளவில் பயிற்சி நடைபெற வேண்டும். அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்றார்.
போட்டிகளில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவிகள் ஜனவரி 18ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத்தில் நடைபெறும் தேசிய போட்டிகளில் பங்கு பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் பவன் குமார், மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.