/* */

குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலையின் குறுக்கே மனித சங்கிலி போராட்டம்

திருவண்ணாமலையில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலையின் குறுக்கே மனித சங்கிலி போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு

HIGHLIGHTS

குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலையின் குறுக்கே மனித சங்கிலி போராட்டம்
X

குடிநீர் வழங்கக்கோரி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் 9-வது தெருவில் கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் குடிநீர் வழங்கக் கோரி இன்று காலை திடீரென திரண்டு வந்து தண்டராம்பட்டு சாலையை மறித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதியில் உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உறுதியளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என அவர்கள் கூறினர்.

அதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 19 Aug 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு