Begin typing your search above and press return to search.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தயாராகிறது திருவண்ணாமலை கோயில்
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலை கோயில் வாகனங்கள் பழுது பார்ப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்க உள்ளது. சுவாமி திருவீதி உலா வரும் சுவாமி வாகனங்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அனைத்து வாகனங்கள் மற்றும் திருத்தேர் பழுது பார்க்கும் பணி , கோவில் வளாகம் சுத்தம் செய்யும் பணி , கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மின்சார வயர்கள் , குடிநீர் குழாய்கள் , அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
திருவிழாவிற்கு அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா? என்று தமிழக அரசு இதுவரை அறிவிக்காத நிலையில் கோவில் நிர்வாகம் தமிழக அரசு அனுமதிக்கும் பட்சத்தில் திருவிழாவை நடத்த தயார் நிலையில் உள்ளது.