Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி 2வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 19ம் தேதி அன்று இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், அவர்கள் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.