/* */

கூட்டுறவு சங்க கடன்: விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு

கூட்டுறவு கடனை ரொக்கமாக கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்துவதாக விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் கலெக்டரிடம் மனு

HIGHLIGHTS

கூட்டுறவு சங்க கடன்: விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு
X

விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வேலப்பாடி, புனலப்பாடி, கல்லேரிப்பட்டு, விளை, புதுப்பட்டு, நெசல், விளைசித்தேதி, வடுகசாத்து, தெள்ளூர் ஆகிய ஊராட்சிகள் சேர்ந்து விடிவெள்ளி விவசாய சங்க உறுப்பினர்கள் கடந்த ஆண்டுகளில் கூட்டுறவு சங்கத்தில் கடனைப்பெற்று புதுப்பித்து வருகிறோம். தற்போது பயிர் சாகுபடி சேதமான நிலையில் கடனை ரொக்கமாக கட்டுமாறு சங்கத்தின் மூலம் வற்புறுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக பாதித்து வந்த நிலையிலும், அதனை தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து அதிக அளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கூட்டுறவு கடனை ரொக்கமாக கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் கட்டாயப்படுத்தியும், வற்புறுத்தியும் வசூல் செய்வது விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகின்றது.

எனவே இந்த நிலைபாட்டினை மாற்றி தற்போது உள்ள பாதிப்பான நேரத்தில், புதிய நடைமுறைகளின்படி ரொக்கமாக கடனை கட்டி புதுப்பிப்பதை தவிர்த்து சிட்டா, அடங்கல் மட்டும் பெற்று விவசாயிகளின் நலனை காக்கும்படியும் கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 15 Dec 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  5. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?