திருவண்ணாமலையில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில், கட்டுமானத் தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம், மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம், மாவட்ட உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில், திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகம் எதிரே, இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் பாரி , தையல் கலை சங்கத்தின் பொதுச் செயலாளர் வீரபத்திரன் ,கட்டுமான சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியம் வழங்கக்கோரி பதிவு செய்த கட்டுமான சுமைப்பணி தொழிலாளர்களுக்கு உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதம் ரூபாய் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.