/* */

நெல்லையில் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது

நெல்லையில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குப் பெறும் பணிகள் தொடங்கியது, 3403 பேர் வாக்களிக்க உள்ளனர்.

HIGHLIGHTS

நெல்லையில் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது
X

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு வசதியாக அவர்களின் வீடுகளில் இருந்தபடியே தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரனா நோயாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய 109 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் மாவட்டம் முழுவதும் 3403 பேர் தபால் வாக்களிக்க தகுதியானவராக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து திட்டமிட்டபடி இன்று நடமாடும் குழுவினர் ஏற்கனவே கண்டறியப்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு படிவத்தினை வழங்கினர்,

பின்னர் குடும்பத்தினர் உறவினர்கள் உள்பட யாருமில்லாத தனி அறையில் சம்பந்தப்பட்ட நபர்களை அடைத்து வைத்து தபால் வாக்கினை பதிவு செய்ய அதிகாரிகள் நேரம் வழங்கினர், படிவத்தினை பூர்த்தி செய்த பிறகு குழு அலுவலர்கள் அதை வாங்கி வாக்காளர் முன்னிலையே மூடி கவரிட்டு அதை வாக்கு பெட்டிக்குள் போட்டனர்.

தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினமும் தபால் வாக்குப் பதிவு பெறப்பட உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மிகவும் சிரமத்துடன் வாகனங்களில் அமரவைத்தும் தோளில் சுமந்தபடியும் வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைப்பார்கள்,

ஆனால் இந்த முறை அவர்களின் நலனுக்காக மிகவும் எளிய முறையில் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குப்பதிவு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 March 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.