அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு புத்தகங்கள்: ஆட்சியர் வழங்கல்
அரசு பணி போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஆட்சியர் புத்தகம், உபகரணங்களை வழங்கினார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டம் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களை ஊக்கவிக்கும் வகையில் பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் மானூர் வட்டம் நாஞ்சான்குளம் கிராமத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களை ஊக்கவிக்கும் வகையில் பயிற்சி புத்தகங்கள் மற்றும் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், நாஞ்சான்குளம் கிராமத்தில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தம்மை தயார்படுத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு இக்கிராமத்திற்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ள சென்ற போது போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகைக்கு பயிற்சி புத்தகங்கள் தேவைப்படுவதாக இளைஞர்கள் தெரிவித்திருந்தனர்.
அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கையை ஏற்று போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்து வருவதை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பயிற்சி இளைஞர்களை நேரில் அழைத்து பயிற்சி புத்தகங்கள் மற்றும் பயிற்சி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் திருநெல்வேலி வட்டாட்சியர், சுப்பிரமணியன், மறுவாழ்வுத்துறை தனி வட்டாட்சியர் செல்வம், மற்றும் அரசு அலுவலர்கள், நாஞ்சான்குளம் இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.