/* */

அடிதடி, கொலை முயற்சி வழக்கு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

HIGHLIGHTS

அடிதடி, கொலை முயற்சி வழக்கு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம் வீரவநல்லூர் நயினார் காலனியை சேர்ந்த வேல்முருகன் என்ற ராக்கி என்பவரின் மகன் சிவா என்ற ராக்கி சிவா(25).

இந்நிலையில் சிவா அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.

அதன்படி குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு அறிவுறுத்தியதன் பேரில் குற்றவாளி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், 10.08.2021 குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 10 Aug 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?