தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் : ஆணையர் அறி ஆய்வு.
கடற்கரையோரம் அமைந்திருப்பதாலும் சில பகுதிகள் பூகோள ரீதியாக கடல் மட்டத்தைவிட தாழ்வாக இருப்பதாலும் மழைநீர் வழிந்தோடுவதில் சிரமம் உள்ளது.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாநகர் கடற்கரையோரம் அமைந்திருப்பதாலும், மாநகரின் சில பகுதிகள் பூகோள ரீதியாக கடல் மட்டத்தைவிட சற்று தாழ்வாக இருப்பதாலும் தூத்துக்குடி மாநகரத்தில் இருந்து மழைநீர் வழிந்தோடுவதில் சிரமம் உள்ளது. இதனால், சிறு அளவு மழை பெய்தாலே குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். இதனால், நகரில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ரூ.60 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாநகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜார்ஜ் ரோடு மற்றும் விஇ ரோடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி தனி அலுவலர்கள் சரவணன், பிரின்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.