உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
உத்திரபிரதேசம் லக்கிம் பூரில் விவசாயிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் காரை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்த கொலைகாரர்களை கைது செய்திட வலிறுத்தியும். இதற்கு காரணமான ஆசிஷ் மிஸ்ராவை கைது செய் வலியுறுத்தி அவரது தந்தை அஜய் மிஸ்ராவினை ஒன்றிய இனை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் இன்று போல்டன்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் மாடசாமி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை கண்டித்து கோஷங்களை எழுப்பப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் அழகுமுத்து பாண்டியன் கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் AlYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் , தோழர்கள் சுப்பிரமணியன், முனியசாமி, பாலசிங்கம், மாரிமுத்து, கோபால், கிருஷ்னமூர்த்தி, தாமரை, முத்தையாபுரம் காளி, பலவேசம் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.