/* */

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் : ஆணையாளர் ஆய்வு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம்-தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆய்வு மேற்க்கொண்டார்.

HIGHLIGHTS

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் : ஆணையாளர் ஆய்வு
X

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கதிர்வேல் நகரில் ரூ. 2 கோடி செலவில் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் அமைய இருக்கும் இடத்தை ஆணையாளர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், சாலை, தெரு விளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய், வாகன காப்பகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி கதிர்வேல் நகரில் ரூபாய் 2 கோடி செலவில் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் அமைய இருக்கும் இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து பிரித்து வாங்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து திடக்கழிவு தரம் பிரிக்கும் மையத்தில் மக்காத குப்பைகளான தெர்மாகோல், துணிகள் பிளாஸ்டிக் அட்டை மற்றும் கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவற்றை தரம் பிரித்து அவற்றை வாங்குகின்ற நுகர்வோர்களிடம் விற்கப்படுகிறது. அதற்காக தூத்துக்குடி கதிர்வேல் நகரில் ரூ. 2 கோடி செலவில் சுமார் சிட்டி திட்டத்தின் கீழ் திடக்கழிவு தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்க உள்ள நிலையில் இன்று அதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, நகர் நல மருத்துவர் வித்யா, மண்டல அலுவலர் சேகர், உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கதிர்வேல் நகரில் நுண் உரம் செயலாக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 25 Jun 2021 1:24 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?