/* */

தூத்துக்குடியில் இருசக்கர வாகன விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் இருசக்கர வாகன விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழப்பு
X

இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த பிரைட்சன்.

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பலியானார்.

தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள சின்னக்கடை தெருவைச் சேர்ந்தவர் ஞானம் மகன் பிரைட்சன் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தார். பிரைட்சன் இன்று அதிகாலை 4 மணி அளவில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவருடன் அவரது நண்பரான பெரியகடை தெருவை சேர்ந்த ஸ்வீஸ்டன் மகன் செர்லின் என்ற ஷெல்டன் (24) என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

தூத்துக்குடி பழைய மாநராட்சி அலுவலகம் பகுதியில் வந்தபோது, பிரைட்சன் மோட்டார் சைக்கிளின் டயர் பஞ்சராகி ஷெல்டன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரைட்சன் உயிர் இழந்தார். ஷெல்டன் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 18 Dec 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...