/* */

துாத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க முனைப்புக் காட்டும் ஆலை நிர்வாகம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டமன்றத்தில் கொள்கை தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

HIGHLIGHTS

துாத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க முனைப்புக் காட்டும் ஆலை நிர்வாகம்
X

ஸ்டெர்லைட்டை திறக்க முனைப்புக் காட்டும் ஆலை நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக துரிதமாக சட்டமன்றத்தில் கொள்கை தீர்மானம் நிறைவேற்றுக - தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது; ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், ஸ்டெர்லைட் ஆலை எந்த காற்று மாசையும், சுற்றுசூழல் மாசையும் ஏற்படுத்தவில்லை எனவும், இதுபோன்ற எந்த விசயத்துக்கும் அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பாக தனது வாதத்தை முன்வைத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை எந்த வழியிலாவது திறந்துவிட வேண்டும் என ஆலை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளூர் அளவில் பணத்தை வாரியிறைத்து போலியான ஆதரவு கோரிக்கையையும், அணி திரட்டலையும் மேற்கொண்டுவரும் அதேநேரத்தில் உச்ச நீதிமன்றம் வாயிலாகவும் ஆலையை திறக்க பெரும் முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே, தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைவதை தடுக்கும் வகையிலும், திறப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் கிடைத்திராத வகையிலும், இத்தகைய நாசகார ஆலை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அமைந்து விடாத வகையிலும், சட்டமன்றத்தில் கொள்கை தீர்மானம் நிறைவேற்றி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறான துரித நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தூத்துக்குடி மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து மக்களுக்கு நிரந்தர நிம்மதி கிடைக்கும். ஆகவே அதனை நோக்கிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சூழலில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிப்பதோடு, போராடும் மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி என்றும் துணை நிற்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 April 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...