/* */

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது

தூத்துக்குடி மாநகராட்சி முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது
X

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்.

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூய்மை பணியாளர்களின் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.

போராட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக பணி நிரந்தரத்திற்கு எதிரான அரசாணை 152-யை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி தூய்மை பணியாளர்களையும் ஓட்டுநர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2023-இல் ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை முழுமையாக உடனே வழங்க வேண்டும்.

தினக்கூலி மற்றும் கிராமப் பஞ்சாயத்து தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் , கனரக வாகன ஓட்டுனர்கள், அனிமேட்டர் பணியாளர்கள், கொசு மருந்து மற்றும் அபேட் மருந்து பணியாளர்கள், பாதாளச்சாக்கடை மற்றும் பிட்டர் கூலி பணியாளர்களுக்கு அரசாணை 36(2D) படி ஊதியம் வழங்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களின் இ.பி.எஃப், குளறுபடிகளை சரி செய்து இ.பி.எஃப், பணத்தை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ராமமூர்த்தி, ரசல், சங்கரன், பேச்சிமுத்து மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 12 July 2023 1:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு