கொரோனா- தனிமைப்படுத்தப்பட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்-மாநகராட்சி வெளியீடு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாநகராட்சி படங்களுடன் அறிவிப்பு வெளியிட்டது.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதியான வன்னார் தெரு, மேல சண்முகபுரம் மற்றும் வடக்கு மண்டல பகுதியான மேட்டுப்பட்டி, பொன் சுப்பையா நகர், முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாம்களில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டனர். இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு பரிசோதனைகளும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிவாழ் பொதுமக்கள் நோய்த் தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அதில் விளக்கப்பட்டது. குறிப்பாக நோய் தொற்று உள்ள நபரிடம் அதிகம் பேசிக் கொண்டிருப்பதோ அல்லது அவர்களை பேச வைத்து கேட்டுக் கொண்டிருப்பது வேண்டாம்.
நோய்தொற்று உள்ளவர்களுக்கு உதவும் போது ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகளை பயன்படுத்துவது நல்லது. பயன்படுத்திய கையுறைகளை பத்திரமாக அப்புறப்படுத்தியவுடன் கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களுக்கு பிறர் பயன்படுத்திய துண்டு, போர்வை மற்றும் உணவு பானங்களைப் பகிர கூடாது. தொற்று உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது மூன்று அடுக்கு மருத்துவ முக கவசமும், கையுறையும் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளும் மருத்துவமுகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.