/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.21 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.21 கோடி பறிமுதல்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ.1.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு, பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஒவ்வொரு தொகுதியிலும் 9 பறக்கும் படை மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் மட்டும் 15 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் முறையான ஆவணம் இன்றி கொண்டு வரக்கூடிய பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 101 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 642 மதிப்பிலான பொருட்கள், ரூ.5 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 750 மதிப்புள்ள போதை பொருட்கள், ரூ.99 ஆயிரத்து 310 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 29 March 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?