திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கு உற்சாக வரவேற்பு
திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கு தூத்துக்குடியில் திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கீதாஜீவன் வந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் தூத்துக்குடி மாநகரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், டாக்டர் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், வஉசி , இந்திராகாந்தி உள்ளிட்ட தலைவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கீதாஜீவன் தொடர்ந்து கலைஞர் அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கீதாஜீவன், தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரான உடன் அனைத்து விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் மக்களின் அனைத்து குறைகளும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின் போது திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.