தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 1221 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 164 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக 134 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த முறை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை புள்ளி ஒரு சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், குழந்தைகள் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.