Begin typing your search above and press return to search.
திருவாரூர்: நகர்ப்புற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் முதல் கட்டமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 1023 அலுவலர்கள் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு திருவாரூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற உள்ள தேர்தலில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இன்று மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் முதல் கட்டமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 1023 அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.