திருவாரூர்: கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
கலை பண்பாட்டுத் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு காயத்ரி திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 170 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, கலைப்பண்பாட்டுத்துறையின் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற 17 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 15 நபர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலையினை மற்றும் நற்சான்றிதழினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.