மஹாவீர் ஜெயந்தி: மதுபானக்கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மஹாவீர் ஜெயந்தி மற்றும் மே தினம் அன்று மூடப்படும்: மாவட்ட ஆட்சியர்
HIGHLIGHTS
சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் ஆணையர் அறிவுறுத்தியபடி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் FL.2 மற்றும் FL.3 உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் எதிர்வரும் 25.04.2021 (ஞாயிற்றுக்கிழமை) மஹாவீர் ஜெயந்தி மற்றும் 01.05.2021 (சனிக்கிழமை) மே தினம் ஆகிய இரண்டு நாட்களுக்கும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும் மதுக்கூடங்கள் இணைந்த மற்றும் இல்லாமல் இயங்கும் மதுபான சில்லரை விற்பனைக்கடைகள் மற்றும் FL.2 மற்றும் FL.3 உரிமம் பெற்ற மது அருந்தும் மதுக்கூடங்களை மூடிட வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மதுபானக்கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் தொடர்புடைய மதுக்கூடங்களின் உரிமைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தவறும்பட்சத்தில் தொடர்புடைய கடைகளின் உரிமதாரர் மற்றும் சில்லரை மதுபானக்கடைகளின் மேற்பார்வையாளர் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா. தெரிவித்துள்ளார்.