Begin typing your search above and press return to search.
திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு
திருவாரூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி அதில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, குடவாசல், முத்துப்பேட்டை, வலங்கைமான் ஆகிய காவல் சரகம் தொகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் நாளை முதல் மாவட்டத்தின் அனைத்து காவல்துறை பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.