Begin typing your search above and press return to search.
மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்
கொரடாச்சேரியில், 200க்கும் மேற்பட்டோர், திமுகவில் இணைந்தனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் உள்ள திமுக அலுவலகத்தில், திருத்துறைப்பூண்டி அமமுக நகர செயலாளர் தாஜ்தீன் தலைமையில், 50 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர், அமமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான பூண்டி. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சி வேட்டி மற்றும் சேலைகளை வழங்கிய பூண்டி கலைவாணன், திமுக என்றும் பொதுமக்களுக்கு உற்றத் தோழனாக விளங்கும் என்றார். திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர், இதில் பங்கேற்றனர்.