திருவாரூர் மருத்துவமனையில் உணவு வழங்கும் திட்டம் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உணவு வழங்கும் திட்டத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் உள்ளவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுவிட கூடாது
என்பதினை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் உடன் உள்ளவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் உடன் உள்ளவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தெரிவித்ததாவது…
இந்த உணவு வழங்கும் திட்டம் மற்றும் இதுபோன்ற மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து செயலாற்றிவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பொதுமக்கள் மனநிறைவோடு பாராட்டி வருகின்றனர்.
இன்று 2500 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலம் வரை உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து தொய்வில்லாமல் வழங்கப்படும்.
தமிழக முதல்வராக பதவியேற்ற 5 நாளில் நம் முதலமைச்சர் செய்த சாதனைகள் மூலமாக இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்த முதலமைச்சர் தான் எங்களுக்கு வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என பெருமித்துடன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்.ஹரிகரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்.கலியபெருமாள்,
மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.ஜோசப்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .பழனிச்சாமி, திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் .கவிதா, திருவாரூர் வட்டாட்சியர் .நக்கீரன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் .டி.செந்தில், முன்னாள் பழனியாண்டவர் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் .எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.