Begin typing your search above and press return to search.
திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது.
திருவாரூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்..
HIGHLIGHTS
திருவாரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முகமது ஷேக்தாவூத் (22) என்பவர் அவர் வசித்து வந்த பகுதியில் இருந்த 10 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் . இது குறித்து நேற்று தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். உடனடியாக அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து முகமது ஷேக்தாவூதை போக்சோ ஆக்ட் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.